அண்மைய பதிவுகள்

உயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது.

ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு  தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.
ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.

கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த பெரிதாக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள், பயனாளர் களைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளன. மைக்ரோசாப்ட் தளத்தில் யார் வேண்டுமானாலும் இதனை டவுண் லோட் செய்து, சோதனை செய்து பார்த்திடலாம்.

காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை எடுத்து திரும்பவும் விளக்கேற்ற விரும்பாமல் தள்ளி வைத்துவிட்டுத் திரும்புகின்றன.

இன்னும் அதில் ஒன்பது குச்சிகள் தான் இருக்கின்றன. அதுவும் முடிந்தால் சந்தியில் காவலுக்கு வாற ஆமி ரணசிங்காவிடம் தான் அம்மாவை விட்டுக் கேட்க வேணும். ஒரு பப்பாப்பழம் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி தருவான். நேற்றுவரை அது குற்றமாகத் தெரியவில்லை நந்தாவுக்கு.